Thursday, December 10, 2009

ஐ.நா வின் மனித உரிமை கவுன்சில் தீர்மானமும் இந்தியாவின் எதிர்ப்பும்...


ஐ.நா வின் மனித உரிமை கவுன்சில் தீர்மானமும் இந்தியாவின் எதிர்ப்பும்... சமீபத்தில் ஜெனிவாவில் நடைப்பெற்ற ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவில் இருக்கும் சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமை பழக்கங்களை மனித உரிமை மீறலாக அங்கீகரிக்க இருப்பதாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் அறிவித்த போது இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சாதி பிரச்சனைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்லக் கூடாது என்ற கோரிக்கையை இந்தியா வைத்தது. சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்புக்கு எப்படியெப்படி தீர்வுகாண வேண்டும் என்ற சில வரைவு கொள்கைகளையும் நான்கு மாதங்களுக்கு முன்பே ஐநா வெளியிட்டிருந்தது. சாதிப் பிரச்சனை அதிகமாக இருக்கும் நாடுகளில் ஒன்றான நேபாளம் ஐநா வரைவு கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தது. செப்டம்பர் 16-ம் தேதி நடந்த கூட்டத்தில் நேபாள அமைச்சர் ஜீத் பகதூர் டார்ஜீ கௌதம் பேசுகையில், சாதி ஒழிப்பு தொடர்பான ஐநா மனித உரிமை அமைப்பின் ஆவணத்துக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான அவர்களது ஆக்கப்பூர்வ முயற்சிகளுக்கு உதவுவோம் என்றார். ஆனால் இந்தியாவோ தங்கள் உள்நாட்டு விவகாரம் சர்வதேச அளவிற்கு கொண்டுச் செல்லத்தேவையில்லை என்று காட்டமாக சொல்கிறது. இதற்கிடையே, ஐ.நாவின் இந்த ஆவணம் குறித்து ஐரோப்பிய யூனியனின் வெளியிட்டுள்ள அறிக்கையில்... சாதி பாகுபாடுகளை களைவதே ஐரோப்பிய யூனியனின் முக்கிய குறிக்கோள். இந்த பிரச்சனை தொடர்ந்தால் மனித உரிமை கமிஷன் எதிர்காலத்தில் இதற்கு எதிராக வரைவு கொள்கையை தயாரித்து ஐநாவின் பொது சபையில் தாக்கல் செய்யும். அதன்மூலம் பெரிய அளவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். என்று குறிப்பிட்டிருக்கிறது. ஐநா சபையின் எச்சரிக்கையும் ஐரோப்பிய யூனியனின் அறிக்கையும் இந்தியாவுக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கின்றன. கடந்த 2001-ஆம் ஆண்டில் டர்பனில் நடந்த மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டின் போது இந்தியாவின் மீது இதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. சாதிபாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ஐநா மனித உரிமைக் கவுன்சில் முயன்ற போது தந்திரமாக இந்தியா தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் அடக்கிவிட்டது. ஆனால் 2009-இல் ஐநா மனித உரிமைக் கவுன்சில் சாதி பாகுபாட்டை மனித உரிமை மீறலாக அங்கீகரித்து தீர்மானத்தை நிறைவேற்றினால் இந்தியாவின் ஐனநாயகம் கேள்விக்குரியாக்கப்படலாம். இதுவரையில் இந்தியா தன் நாட்டு மக்களின் சாதிவெறி மற்றும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக என்ன செயல்பாட்டை முன்னெடுத்திருக்கிறது? சாதி ஒழியவேண்டும் என்று வாய்க்கிழிய பேசும் இந்திய தேசம் அதற்காக இதுவரை என்ன செய்திருக்கிறது? "பள்ளியில் படிக்க வரும் மாணவர்களிடம் சாதி என்னவென்று கேட்கப்படுகிறது..." "இன்னும் ஊருக்கு வெளியே சேரிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் வாழ்கிறார்கள்..." "இன்னமும் கோயில் கருவறைக்குள் நுழைய பார்ப்பனர் சாதியைத் தவீர வேறு சாதியினர் யாருக்கும் உரிமை இல்லை. சில சாதியினருக்கு கோயில் உள்ளேயே வர அனுமதியில்லை..." இதோ மிக சமீபத்தில் நடந்த ஓர் சம்பவம்.... தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தைச் சேர்ந்த காங்கியனூர் கிராமத்தில் இருக்கும் கோவிலுக்குள் நீண்ட காலமாக தலீத் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தாங்கள் கோவிலுக்குள் சென்று கடவுளை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தினரிடம் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் எந்த பலனும் இல்லாததால் செப்டம்பர் 30.09.09-இல் கோயில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது போலீசாரால் தாக்கப்பட்டு 105-தலீத் மக்களை சிறையில் அடைத்துள்ளது இந்திய ஜனநாயகம். இன்னமும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இப்படி இந்தியா முழுவதும் ஏராளமாக மனிதஉரிமை மீறல்கள் நடக்கிறது. சுதந்திரம் அடைந்த நாட்டில் இன்னமும் மனிதனை மனிதன் இழிவுபடுத்துவதும், தலீத் மக்களுக்குள் உரிமைகள் எதுமற்ற நிராயுதபாணிகளாக வைத்திருப்பதும் எந்த விதத்தில் சமத்துவத்துவமாகும்?

கல்வி - அடிப்ப்டை மனித உரிமை




கல்வி - அடிப்ப்டை மனித உரிமை
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி கற்க உரிமை உண்டு. நமது அடிப்படைக் கொள்கைகளில் சில வருமாறு
*குறைந்தபட்சம் ஆரம்பம் மற்றும் அடிப்படை கட்டங்களில் ஆரம்பக் கல்வி இலவசமாக அளிக்கப்படும்*ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்படும்*தொழிற்கல்வி பொதுவாக அனைவரும் கற்கும் வகையில் இருக்கும்படி செய்யப்படும்*உயர்கல்வி, தகுதியின் அடிப்படையில் அனைவருக்கும் சமமான முறையில் பெறும்படி வழிவகை செய்யப்படும். மனிதனின் ஆளுமை முழுவளர்ச்சி பெறும் வகையிலும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் ஆகியவற்றை மதிக்கும் எண்ணத்தை வலுவூட்டும் வகையிலும் கல்வி இருக்க வழிசெய்யப்படும்*தங்களது குழந்தைகளுக்கு எந்த வகையான கல்வியை அளிக்க வேண்டும் என்பது பற்றிய உரிமை பெற்றோர்களுக்கு இருக்கிறது.
அனைவருக்கும் கல்வி
அனைவருக்கும் கல்வி என்ற இயக்கம், உலகளாவிய கடமை உணர்வுடன், அனைத்து குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் ஆகியோர்களுக்கு தரமுள்ள அடிப்படைக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக செயல்படுகிறது. 1990ம் ஆண்டில் நடந்த ‘அனைவருக்கும் கல்வி’ என்பது குறித்த உலக மாநாட்டின்போது இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
பத்து வருடங்கள் கழிந்தும், பல நாடுகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியாது இருந்தன. பல்வேறு நாடுகளின் பிரதிநிதகள் செனகலில் உள்ள டாக்கர் என்ற இடத்தில் மறுபடியும் கூடிக் கலந்து பேசி, 2015ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை எட்டுவதற்கு நடவடிக்கைகைகள் எடுப்பதற்கு தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர். குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகியோரது கல்வித் தேவைகளை 2015ற்குள் பூர்த்தி செய்ய, கல்வி சம்பந்தமான 6 இலக்குகளை, இவர்கள் கண்டறிந்துள்ளன்ா.
இவை அனைத்திற்கும் முன்னணித் தொடர்பு இயக்கமான யுனெஸ்கோ, சர்வதேச அளவிலான முயற்சிகளை ஒன்று திரட்டி, அனைத்தையும் இணைத்து அனைவருக்கும் கல்வி என்ற பணியிணை ஒருங்கிணைக்கிறது. அரசாங்கங்கள், வளர்ச்சிப்பணிக்கான நிறுவனங்கள், அரசு சாரா இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் ஆகியோர், மேலே குறிப்பிட்ட குறிக்கோளை எட்டுவதற்காகப் பணிபுரிந்து வரும் அமைப்புகளில் சிலவாகும்.
அனைவருக்கும் கல்வி சம்பந்தமான குறிக்கோள்களை எட்டும் முயற்சிகள் உலகளாவிய வகையில் நடத்து வரும் எட்டு மில்லினியம் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும் பெருமளவில் உதவி புரிவதாய் அமையும். அதிலும் குறிப்பாக மில்லினியம் வளர்ச்சி இலக்குகளின் இரண்டாவது இலக்காண உலக அளவிலான ஆரம்பக்கல்வி மற்றும் 3வது இலக்கான கல்வி கற்பதில் பாலின சமத்துவம் ஆகியன 2005க்குள் எட்டப்பட உதவும்.
கிராம மக்களிடையே, கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி அறியச் செய்யும் வகையில் பிரச்சாரம் செய்வது, முக்கியத் தேவையாக உள்ளது. கீழ்க் காணும் விஷயங்கள், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்பு காண உதவும்.
1. பெண் குழந்தைகளுக்கும் கல்வி அளிப்பது
2. குழந்தை தொழிலாளர்களுக்குக் கல்வி மற்றும் இணைப்புக் கல்வித் திட்டங்கள் செயல்பாடு
3. எஸ்.சி., எஸ்.டி., பி.ஸி மற்றும் சிறுபான்மையினருக்குக் கல்வியறிவு அளிப்பது
4. தனித்திறன் படைத்த, உடல் ரீதியாக சவாலைச் சந்திக்கும் குழந்தைகள், சிறப்புக் குழந்தைகள் ஆகியோர்களுக்குக் கல்வியறிவு அளிப்பது
5. பெண்களுக்கு கல்வி அளிப்பது

மனித உரிமை மீறல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை



மனித உரிமை மீறல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை

கொலையானவர்களின் உடல்கள் பரிசோதனைக்காக மீட்கப்படுகின்றன
மூதூர் தொண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலை உட்பட இலங்கையில் நடந்த 17 மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது விசாரணை முழுமை பெறாமலேயே தனது பணியை முடித்துக்கொண்டுள்ளது.
இந்த மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கான சாட்சிகள் பலர் இடம்பெயர்ந்து வெளிநாடு சென்று விட்டதால், அவர்களிடம் இருந்து வீடியோ மூலம் சாட்சிகளை பதிவு செய்வதில் உள்ள பிரச்சினைகளும், இலங்கையில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டம் அமலில் இல்லாததாலும், தம்மால் பல விசாரணைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று அந்த ஆணைக்க்ழுவின் தலைவரான முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நிசங்க உடலகம தெரிவித்துள்ளார்.
மூதூரில் அக்சன் பெயிம் ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இலங்கை படையினருக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்பதனை விசாரணைகள் கூறுவதாக தெரிவித்த உடலகம அவர்கள், ஆயினும், அந்த சம்பவத்தில் முஸ்லிம் ஊர்காவற்படையினருக்கு சம்பந்தம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை நகர மாணவர்கள் கொலை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை ஆகியவை தொடர்பில் சாட்சிகள் வெளிநாட்டில் இருப்பதுடன், அவர்கள் சாட்சி சொல்லத் தயாராக இருக்கின்ற போதிலும், வீடியோ மூலம் சாட்சிகளை பதிவு செய்வதில் உள்ள தடைகளால் அவற்றை பெறமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் இன்னமும் இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப் படாத காரணத்தினால், அதுவும் விசாரணையை பூர்த்தி செய்யய முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.